ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
சமீபத்தில் மலையாளத்தில் மோகனலோரால் நடித்த நீராளி என்கிற படம் வெளியானது. தமிழில் உதயநிதி நடித்த இப்படை வெல்லும் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சந்தோஷ் டி குருவில்லா என்பவர் தான் இந்தப்படத்தை தயாரித்திருக்கிறார். இந்தப்படம் குறித்தும் தன்னை பற்றியும் சோஷியல் மீடியாவில் தவறான செய்திகளை பரப்புவர்களை எச்சரித்துள்ளார் குருவில்லா.
விஷயம் இதுதான்.. சந்தோஷ் குருவில்லாவின் தந்தை இந்தியன் பெந்தகொஸ்தே சபையின் பொருளாளராக பொறுப்பு வகிக்கிறார்.. அதை பயன்படுத்திதான் குருவில்லா தற்போது படம் தயாரித்து வருகிறார் என்று சிலர் சோஷியல் மீடியாவில் கொளுத்தி போட்டுவிட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக பரவி வரும் இந்த செய்தியை பரப்பியவர்களை கண்டித்துள்ள குருவில்லா, தன் தந்தை பொருளாளர் ஆவதற்கு முன்பே தான் நான்கு படங்களை தயாரித்துள்ளதாகவும், அப்போதிருந்தே வெற்றிகரமான ஒரு பிசினஸ்மேன் ஆக தான் இருந்து வருவதாகவும் தனது முகநூல் பக்கத்தில் கொந்தளிப்புடன் பதிவிட்டுள்ளார்.