‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாகுபலி நாயகன் பிரபாஸ், தற்போது சாஹோ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். மேலும், பாகுபலிக்குப்பிறகு பிரபாசுடன் நடிக்க இந்திய அளவில் உள்ள பல முன்னணி நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்தியில் தனுஷ் நடித்த ராஞ்ஜனா உள்பட பல படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்வரா பாஸ்கரும் பிரபாசுடன் நடிக்க வேண்டும் என்பது தனது கனவு என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஐதராபாத்துக்கு வந்த இவர் மீடியாக்களை சந்தித்தார் அப்போது, பிரபாஸ் என்னை கவர்ந்த நடிகர். அதனால் அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது என்று கூறிய ஸ்வரா பாஸ்கர், நான் இந்தி படங்களில் நடித்து வந்தபோதும் எனது தந்தை ஆந்திராவைச் சேர்ந்தவர் தான் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.