‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தனது கண் சிமிட்டல்கள் மூலம் ஒரே பாட்டில் பிரபலமானவர் தான்கேரளாவை சேர்ந்த, புருவ அழகி எனப்படும் பிரியா வாரியர்.. சோஷியல் மீடியா மூலம் லட்சக்கணக்கில் ரசிகர்களை பெற்றுள்ள இவருக்கு பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைப்பு வருகிறது.. இவரும் அதில் தவறாமல் கலந்துகொள்ளும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற ஏசியாநெட் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள வந்தார் பிரியா வாரியர்.. விழாவிற்கென அவர் விசேஷமாக அணிந்து வந்த உடை தரையில் படாமல் தூக்கிப்பிடிப்பித்துக்கொண்டு ஒரு பெண் உதவியாளரும் கூடவே நடந்து வந்தார்.
இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரவ, நடித்து ஒரு படம் கூட ரிலீசாகவில்லை.. அதற்குள் துணியை பிடிக்க ஆள் வைக்கும் அளவுக்கு அப்பாடக்கர் ஆகிவிட்டாரா இவர் என்கிற ரேஞ்சில் நெட்டிசன்கள் பிரியா வாரியரை கலாய்த்து தள்ளிவிட்டனர்.