மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கடந்த பிப்ரவரி மாதம் திடீர் மரணமடைந்து இந்திய சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் நடிகை ஸ்ரீதேவி. அவரது மரணம் குறித்து இன்னும் சிலர் சந்தேகங்களை எழுப்பிக்கொண்டிருக்கும் நிலையில், ஸ்ரீதேவியின் மரணத்தில் இருந்து தான் வாழ்க்கையை கற்றுக்கொண்டதாக நடிகர் நாகார்ஜூனா கூறியுள்ளார்.
ஸ்ரீதேவி ஒரு மிகப்பெரிய நடிகை. கோவிந்தா கோவிந்தா என்ற படத்தில் என்னுடன் இணைந்து நடித்தார். அது மறக்க முடியாத நினைவுகள். அவருடன் நடித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இப்போதுகூட அவர் இறந்து விட்டார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.
அவரது மரணம் எதிர்பாராதது. ஸ்ரீதேவியின் மரணத்திற்கு பிறகு நான் என்னைச் சுற்றியிருப்பவர்களை நேசிக்கத் தொடங்கியிருக்கிறேன். வாழ்கிற ஒவ்வொரு நொடியையும் சந்தோசமாகவும், மகிழ்ச்சியாகவும் கழிக்க விரும்புகிறேன் என்கிறார் நாகார்ஜூனா.