முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி |
நடிகர்களில் பிருத்விராஜை பொறுத்தவரை பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது ரசிகர்களிடம் பந்தா காட்ட மாட்டார். அந்த நேரத்தில் அரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன் அவர்கள் கோரிக்கைகளையும் அந்த நேரத்தில் நிறைவேற்றவும் செய்வார்.
அப்படித்தான் சமீபத்தில் கேரளாவில் சாலக்குடி பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிருத்விராஜ். அது மறைந்த நடிகர் கலாபவன் மணியின் சொந்த ஊர் வேறு. அங்கிருந்த ரசிகர்கள் பிருத்விராஜை ஒரு பாடல் பாடும்படி வேண்டுகோள் வைத்துள்ளனர்.
அதற்கு பிருத்விராஜ் “பாடலா..? அதுவும் மணி சேட்டன் ஊரிலே நான் பாடுவதா..? அவ்வளவுதான் அந்த கடவுள் கூட என்னை மன்னிக்க மாட்டார்” என ஜகா வாங்கினார். ஆனாலும் ரசிகர்கள் விடுவதாக இல்லை என தெரிந்ததும் தான் நடித்த 'அமர் அக்பர் ஆண்டனி' படத்தில் இருந்து ஒரு பாடலை பாடி ரசிகர்களை மகிழ்வித்தாராம் பிருத்விராஜ்.