நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் எப்படி அம்மா நடிகை என்றால் நம்பர் ஒன் இடத்தில் சரண்யா பொன்வண்ணன் இருக்கிறாரோ, அப்படி ஒரு இடத்தை மலையாள சினிமாவில் பிடிக்க பரபரவென பம்பரமாக சுழல்கிறார் சீனியர் நடிகை சாந்தி கிருஷ்ணா. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் தமிழில் 'பன்னீர் புஷ்பங்கள்' என்கிற படம் மூலமாக பிரபலமானவர் தான் சாந்தி கிருஷ்ணா.
பல ஆண்டுகளுக்கு முன்பு தனது திருமணத்திற்காக சினிமாவை இரண்டுமுறை உதறிய இவர், இப்போது மீண்டும் சினிமா தான் தனது வாழ்க்கை என முடிவெடுத்துள்ளார். 51 வயதான இவர், இப்போது மலையாள சினிமாவில் அம்மா, அக்கா வேடங்களை குறிவைத்துள்ளார். அந்தவகையில் இவருக்கு நிவின்பாலியின் நடிக்கும் 'ஞண்டுகளுட நாட்டில் ஓரிடவேள' என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது
அதில், அவரது நடிப்பிற்கு வரவேற்பு கிடைக்கவே, சமீபத்தில் வெளியான 'குட்டநாடன் மர்பாப்பா' படத்தில் குஞ்சாக்கோவின் அம்மாவாக நடித்திருந்தார். அடுத்தததாக வினீத் சீனிவாசனின் அம்மாவாக நடித்துள்ள 'அரவிந்தண்டே அதிதிகள்' என்கிற படம் வரும் ஏப்-27ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இதுதவிர இன்னும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சாந்தி கிருஷ்ணா.