மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கடந்த 2௦17ஆம் வருடத்திற்கான கேரள அரசின் சிறந்த நடிகர் விருது முக்கிய நடிகர்கள் யாருக்கும் கிடைக்காமல் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான இந்திரன்ஸ் என்பவருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த விருதுக்கு இவர் தகுதியானவர் அல்ல என சர்ச்சையான கருத்துக்களை கூறியுள்ளார் 'செக்ஸி துர்கா' பட இயக்குனர் சணல் குமார் சசிதரன். எப்போதும் சர்ச்சை கருத்துக்களால் சிக்கலை இழுத்துக் கொள்ளும் இவர், சமீபத்தில் ஒரு பேட்டியின்போது இப்படி சொல்லப்போக, அவர் மீது கண்டனங்கள் தொடர்ந்து பாய்ந்த வண்ணம் இருக்கின்றன.
ஆனால் உடனே, தான் கூறிய கருத்துக்காக நடிகர் இந்திரன்சிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் சணல்குமார் சசிதரன். மேலும் தான் இந்திரன்ஸ் பற்றி குறைவாக எதுவும் சொல்லவில்லை என்றும், தான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்றும் விளக்கம் கூறியுள்ளார்.