‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கடந்த டிசம்பர் மாதம் மலையாளத்தில் வெளியான 'மாயநதி' படம் கிறிஸ்துமஸ் ரிலீஸ் படங்களிலேயே அதிக வரவேற்பை பெற்றது.. இந்தப்படத்தை பிரபல இயக்குனர் ஆஷிக் அபு இயக்க, வளர்ந்துவரும் இளம் நாயகன் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமி நடித்திருந்தார்.
காதல் கதைகளிலேயே இது புதுமாதிரியான திரைக்கதை பாணியில் சொல்லப்பட்டிருந்த விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. திரையுலகினர பலரின் பாராட்டையும் பெற்றது. தற்போது இந்தப்படம் வெளியாகி 75வது நாளை தொட்டுள்ள நிலையில் நடிகர் மோகன்லால் தனது முகநூல் பக்கத்தில் இந்தப்படத்திற்கு பாராட்டு பத்திரம் எழுதியுள்ளார்.
“சமீபத்தில் தான் இந்த படத்தை பார்த்தேன். மனம் திறந்து சொல்ல வேண்டுமென்றால் உண்மைக்கு பக்கத்தில் இருந்து அழகாக நெய்யப்பட காதல் கதை தான் இந்த 'மாயநதி'. 75வது நாளை கொண்டாடும் படக்குழுவினருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார் மோகன்லால்.