மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மோகன்லால் தற்போது நடித்து வரும் புதிய படம் 'நீராளி'. இந்தப்படத்தில் பார்வதி நாயர், நதியா இருவரும் முக்கிய வேடங்களில் நடித்தாலும் படத்தில் மோகன்லாலுக்கு கதாநாயகியே இல்லை. இதில் என்ன ஆச்சர்யம் என்றால் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லால் நடித்த 'நோக்கெத்த தூரத்து கண்ணும் நட்டு' படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகமானார் நதியா.
அதன்பின் இன்னும் மூன்று படங்களில் மோகன்லாலுடன் இணைந்து நடித்தாலும், இதில் எதுவுமே மோகன்லாலுக்கு ஜோடியாக நதியா நடிக்கவில்லை. இப்போது பல ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்து நடிக்கும் 'நீராளி' படத்திலும் அவர் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்பதும் இன்னொரு ஆச்சர்யம் தான்.
தவிர மும்பையில் வசித்துவரும் நதியாவுக்கு இத்தனை வருடங்களில் அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முதன்முறையாக அவரது ஊரான மும்பையில் நடைபெறுவதில் கூடுதல் சந்தோஷமாம்.