எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ஜெய்சிம்ஹா படத்தில் நடித்த பாலகிருஷ்ணா, அடுத்தபடியாக தனது தந்தையான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் படத்தை தயாரித்து, நடிக்கிறார். இன்னும் சில மாதங்களில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த நிலையில், பாலகிருஷ்ணாவுக்கு கையில் ஆபரேசன் நடைபெற்றுள்ளது.
தனது 100வது படமான கவுதமிபுத்ர சட்டகர்னி படத்தில் நடித்தபோது பாலகிருஷ்ணாவின் தோள்பட்டையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், தொடர்ந்து வலி இருந்து வந்ததால் ஐதராபாத்திலுள்ள உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அன்று பாலகிருஷ்ணாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சைக்குப் பிறகு பாலகிருஷ்ணா நலமுடன் இருப்பதாகவும், அடுத்த மாதம் முதல் என்டிஆர் வாழ்க்கை வரலாறு படவேலைகளில் அவர் ஈடுபடுவார் என்றும் பாலகிருஷ்ணா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையிலிருந்து அவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.