‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடித்த ஜெய்சிம்ஹா படத்தை அடுத்து தேஜா இயக்கத்தில் தனது தந்தை என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் பாலகிருஷ்ணா. இந்தநிலையில், நேற்று முன்தினம் தனது தந்தை என்டிஆரின் நினைவு நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு ஊடகங்களை சந்தித்தார்.
அப்போது பாலகிருஷ்ணா கூறுகையில், எனது தந்தை என்டிஆர் புகழ் பெற்ற நடிகர் மட்டுமின்றி, ஆந்திராவின் முதலமைச்சராக இருந்தவர். அவருக்கு இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இதுவரை வழங்கப்படவில்லை. பல அரசுகள் மாறியபோதும் என்டிஆருக்கு பாரத ரத்னா விருது கிடைக்கவில்லை. அதனால், என்டிஆருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன். அதற்காக போராடுவேன் என்று பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.