மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த தெலுங்கு நடிகர் மோகன்பாபு, தற்போது காயத்ரி என்ற படத்தில் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். முன்னாள் அரசியல்வாதியான இவர், தனியார் டிவி ஒன்று நடத்தி வரும் கருத்தரங்கில் பங்கேற்றார்.
அப்போது மோகன்பாபு கூறுகையில், அரசியல் வேறு, சினிமா வேறு, இன்றைக்கு 95 சதவிகிதம் அரசியல்வாதிகள் ராஸ்கல்ஸாக உள்ளனர். மக்களை ஏமாற்றுகிறார்கள், தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. இது அவர்களுக்கு பழக்கமாகி விட்டது. ஆனால் எனது சகோதரரான முன்னாள் ஆந்திர முதல்வர் என்டிஆர் ஒரு நல்ல அரசியல்வாதி. அவர் ஆட்சியில் ஊழல் இல்லை, லஞ்சம் இல்லை. என்னையும் அவர் பார்லிமென்ட்டிற்கு அனுப்பி வைத்தார். நானும் நேர்மையாக அரசியல் செய்தேன் என்று கூறியுள்ளார்.