‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் கத்தி. இந்த படத்தில் வில்லனாக நடித்தவர் இந்தி நடிகர் நீல்நிதின் முகேஷ். இவர் தற்போது பிரபாஸின் சாஹோ படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகி வரும் இந்த படத்தில் முந்தைய படங்களை விடவும் பிரமாண்ட வில்லனாக நடித்துக்கொண்டிருக்கிறார் நீல்நிதின் முகேஷ்.
பிரபாசுடன் சாஹோ படத்தில் நடிப்பது பற்றி அவர் கூறுகையில், பாகுபலி நாயகன் பிரபாசுடன் நடிப்பது சவாலாக உள்ளது. அவருக்கு ஈடு கொடுத்து நடிக்க வேண்டும் என்பதற்காக நிறைய ரிஸ்க் எடுக்கிறேன். குறிப்பாக, சண்டைக்காட்சிகளில் நிறைய சாகசங்கள் செய்ய வேண்டியதிருந்தது. அதனால், இதுவரை எந்த படத்திற்கும் எடுக்காத ரிஸ்க் எடுத்து கஷ்டப்பட்டு நடித்து வருகிறேன்.
அதோடு, தமிழ், தெலுங்கு எனக்கு தெரியாத மொழிகள் என்றபோதும் சரியாக வார்த்தைகளை உச்சரித்து நடித்துக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் சாஹோ படம் எனக்கு எல்லா வகையிலும் சேலஞ்சிங்கான படமாக அமைந்துள்ளது. அதோடு, தெலுங்கில் நான் அறிமுகமாகும் இந்த சாஹோ படம் அதிரடி வில்லனாக என்னை வெளிப்படுத்தப்போகிறது என்கிறார் நீல் நிதின் முகேஷ்.