‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் மலையாளத்தில் 'ஆடு-2' என்கிற படம் வெளியானது. இந்தப்படத்தில் 'திமிரு' புகழ் வில்லன் நடிகரும், சமீபத்தில் சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருது பெற்றவருமான விநாயகன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
மிதுன் மானுவேல் தாமஸ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படம் ஓரளவு வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தநிலையில் படத்தின் இயக்குனர் படப்பிடிப்பின்போது எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு மரக்கொட்டகையை ஜீப்பில் இருந்தபடியே விநாயகன் குண்டுவீசி தகர்ப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருந்தது.
அந்த சமயத்தில் விநாயகன் வீசிய வெடிகுண்டு படக்குழுவினரே எதிர்பாராத அளவுக்கு பெரிய அளவில் வெடித்து, அந்த வெப்பம் விநாயகத்தையும் நன்றாகவே தாக்கியதாம். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் உடனே இரண்டு வாளி தண்ணீரை விநாயகன் தலையில் ஊற்றி வெப்பச்சூட்டில் இருந்து அவரை மீட்டனராம்.