நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத்தில் வெளியான 'கசபா' படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக மம்முட்டி பேசியது தனக்கு வருத்தமளிக்கிறது என ஒரு நிகழ்வில் நடிகை பார்வதி குறிப்பிட்டார். இதை தொடர்ந்து மமுட்டியின் ரசிகர்களில் சிலர் எல்லை மீறிப்போய், அவருக்கு கொலை, பாலாதகார மிரட்டல்கள் விடுத்தனர். பார்வதி கொடுத்த புகாரின் பேரில் இது தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விஷயத்தில் தான் பேசியது குறித்து மம்முட்டியிடம் பார்வதி விளக்கம் சொல்ல, போனிலேயே அவருக்கு ஆறுதல் சொன்னதோடு, இதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவரை தான் தப்பாக நினைக்கவே இல்லை என்றும் கூறினாராம் மம்முட்டி. இதைத்தொடர்ந்துதான் மம்முட்டி தனது ரசிகர்களிடம் கண்ணியமாக நடக்குமாறு அறிவுரை கூறினார் என்றும் சொல்லப்படுகிறது.
அதேசமயம் இன்னொரு பக்கம் இந்த விவகாரத்தின் பின்னணியில், சர்ச்சைக்கு வித்திட்ட 'கசபா' படத்தின் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் இருப்பதாகவும் அவர்தான் சோஷியல் மீடியா மூலமாக மம்முட்டியின் தீவிர ரசிகர்களாக இருப்பவர்களை பார்வதிக்கு எதிராக தூண்டி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.