ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி |
பிரபல ஹிந்தி நடிகையான ஸ்ரத்தா கபூர், தற்போது பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு முதல் தெலுங்கு படம் என்றபோதும் தெலுங்கில் தனக்குத்தானே டப்பிங் பேச முயற்சித்து வருகிறார். மேலும், சாஹோ படமும் பாகுபலி போன்று மூன்று மொழிப் படம் என்பதால் இந்த படத்திற்கு பிறகு தென்னிந்திய சினிமாவிலும் அழுத்தமாக கால்பதித்து விட வேண்டும் என்று புதியபட வேட்டைகளிலும் ஈடுபட்டுள்ளார் ஸ்ரத்தா கபூர்.
அதோடு, அவ்வப்போது டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடுவதை தொடர்ந்து வரும் ஸ்ரத்தா கபூர், சமீபத்தில் ரசிகர்களுடன் டுவிட்டரில் சாட் செய்தபோது, பிரபாஸ்-மகேஷ்பாபு குறித்து ரசிகர்கள் அவரிடம் கருத்து கேட்டனர்.
அதற்கு ஸ்ரத்தா பதில் கூறுகையில், பிரபாஸ் ஒரு சிறந்த மனிதர். ரொம்ப அன்பானவர். அதேப்போல் மகேஷ்பாபு மனதைக்கவரும் அற்புதமான மனிதர் என்றும் கூறியுள்ளார்.