‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாகுபலி-2விற்கு பிறகு சுஜித் இயக்கும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். பாகுபலி படங்களைப்போன்றே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரமாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தில் ஹிந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், சில அதிரடியான சண்டை காட்சிகளை துபாய் மற்றும் அபுதாபியில் ஜனவரி முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், அந்த நாடுகளில் இவர்கள் கேட்ட லொகேசன்களில் படப்பிடிப்பு நடத்த இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அதன்காரணமாக அந்த சண்டை காட்சிகளுக்கு பிறகு படமாக்கயிருந்த காட்சிகளை தற்போது ஐதராபாத்தில் படமாக்க தயாராகி விட்டனர். அதனால் இன்னும் சில நாட்களில் மீண்டும் சாஹோ படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்குகிறது.
அதன்பிறகு சண்டை காட்சிகளை படமாக்க துபாய், அபுதாபியில் அனுமதி கிடைத்ததும் அங்கு முகாமிடுகிறதாம் சாஹோ பட யூனிட்.