மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நாகார்ஜூனா நடித்த சிவா படத்தின் மூலம் இயக்குனரானவர் ராம் கோபால் வர்மா. அதையடுத்து இவர்கள், கோவிந்தா கோவிந்தா என்ற படத்தில் மீண்டும் இணைந்தனர். கடந்த 23 ஆண்டுகளாக அவர்கள் எந்த படத்திலும் இணையவில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் நாகார்ஜூனா நடிப்பில் ஒரு படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் ராம் கோபால் வர்மா. நாகார்ஜூனா தயாரித்து நடிக்கும் அந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை
இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 20-ந் தேதி முதல் ஐதராபாத்தில் தொடங்கி தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறுகிறது. மேலும், இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், நடிகை தபு ஆகியோர் நடிப்பதாக செய்திகள் பரவியுள்ளன. ஆனால் இந்த செய்தியை ராம்கோபால்வர்மா மறுத்துள்ளார்.
நாகார்ஜூனா நடிக்கும் படத்தில் அமிதாப் பச்சனும், தபுவும் நடிக்கவில்லை. இந்த செய்தி வதந்தி என்று கூறியுள்ள அவர், நாகார்ஜூனா நடிக்கும் படம் ஆக்சன் கதையில் உருவாகிறது. இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.