‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தனது மருமகள் சமந்தாவுடன் இணைந்து நாகார்ஜூனா நடித்த படம் ராஜூ ஹரி காதி-2. இப்படத்தை தொடர்ந்து அடுத்தபடியாக ராம் கோபால் வர்மா இயக்கும் படத்தில் நடிக்கிறார் நாகார்ஜூனா. ஆக்சன் கலந்த காமெடி கதையில் உருவாகும் இந்த படம் குறித்த செய்திகள் ஏற்கனவே வெளியாகி விட்டபோதும், தற்போது தனது டுவிட்டரில் அந்த செய்தியை உறுதிபடுத்தியுள்ள நாகார்ஜூனா, நவம்பர் 20-ந்தேதி முதல் படப்பிடிப்பு நடைபெறயிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 25 வருடங்களுக்கு முன்பு நாகார்ஜூனாவை வைத்து தான் இயக்கிய சிவா படத்தை தனது தந்தையை வைத்து கிளாப்ஸ் அடிக்க வைத்து படப்பிடிப்பை தொடங்கினார் ராம்கோபால்வர்மா. இந்த நிலையில், இந்த புதிய படத்தை தனது அம்மாவை கிளாப்ஸ் அடிக்க வைத்து படப்பிடிப்பை தொடங்கப்போகிறாராம். இந்த தகவலை ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.