தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
மோகன்லால், மம்முட்டி ஆகியோரின் படங்களில் தொடர்ந்து இடம்பிடித்து நடித்துவரும் மலையாள குணச்சித்திர நடிகரான அலான்சியர் லே, அரசியல் விஷயங்களில் தனது கருத்தையும், எதிர்ப்பையும் கூட வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி கவனம் ஈர்க்க தயங்காதவர்.
கடந்த ஜனவரி மாதம் பிஜேபி கட்சிக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக காசர்கோடு சென்ற அலான்சியர், அங்கே அமெரிக்க கொடியை கோவணமாக கட்டிக்கொண்டு, ஒரு வேட்டியை மட்டும் உடுத்திக்கொண்டு, மஞ்சப்பையுடன் பஸ் ஏறி அமெரிக்கா போவதுபோல ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.
சமீபத்திலும் கூட வேறொரு விஷயத்திற்காக இன்னொரு வித்தியாசமான எதிர்ப்பை காட்டியுள்ளார் அலான்சியர் லே. பிஜேபியை சேர்ந்த சரோஜ் பாண்டே என்கிற பெண் அரசியல்வாதி, “பிஜேபி நடத்தும் பேரணிகள் பக்கம் குறைசொல்லும் விதமாக பார்வையை திருப்பும சி.பி.எம் கட்சிக்காரர்களின் கண்களை பிடுங்கி எறிந்துவிடுவேன்” என சர்ச்சையாக பேசினார். இதற்கு தனது எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்த அலான்சியர் லே, தனது கண்களை கட்டிக்கொண்டு தனது பகுதியில் இருந்த போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று சரோஜ் பாண்டே மீது புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.