மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாள முன்னணி நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த கடத்தல் வழக்கில் மலையாள முன்னணி நடிகர் திலீப் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு நடந்து வருகிறது. திலீப் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
பாலியல் தொல்லைக்கு உட்பட்ட பெண்களின் பெயரை வெளியிடக்கூடாது என்பது சட்ட விதி. அதையும் மீறி திலீப்பின் நண்பரும், கேரள சட்டமன்ற உறுப்பினருமான பி.சி.ஜார்ஜ் கடத்தப்பட்ட நடிகையின் பெயரை குறிப்பிட்டு அவருக்கு எதிரான சில கருத்துக்களை கூறியிருந்தார். இதை எதிர்த்து கொச்சி களமச்சேரியை சேர்ந்த கிரிஷ் பாபு என்பவர் கோழிக்கோடு குன்னமங்கலம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் பி.சி.ஜார்ஜ் மீது வழக்கு பதிவு செய்யுமாறு கொச்சி மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. இது போன்ற வழக்கு தொடரப்படுவது இதுவே முதல் முறை, அதுவும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீது என்பதால் கேரள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.