விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
ஒரே ஹீரோவின் அடுத்தடுத்த படங்களில் சில காட்சிகள் ஒரேபோல அமைவது அபூர்வம். பெரும்பாலும் கதை கேட்கும்போதே ஹீரோக்கள் அதை கண்டுபிடித்து தவிர்த்து விடுவார்கள். ஆனாலும் இதையும் தாண்டி துல்கர் சல்மான் நடித்த அடுத்தடுத்த இரண்டு படங்களில் ஒரேபோல காட்சி அமைப்பு குறிப்பாக க்ளைமாக்ஸ் அமைந்திருப்பதை துல்கர் சல்மான் எப்படி கவனிக்காமல் விட்டார்..? அல்லது தெரிந்தே எப்படி ஒப்புக்கொண்டார் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது..
கடந்த சில மாதங்களுக்கு முன் துல்கர் நடிப்பில் வெளியான படம் 'காம்ரேட் இன் அமெரிக்கா'. இந்தப்படத்தில் தன்னை உயிருக்கு உயிராக காதலித்த காதலிக்கு வெளிநாட்டில் திருமணம் என்பதை கேள்விப்பட்டு உயிரை பணயம் வைத்து பாஸ்போர்ட் விசா இல்லாமல் அங்கே செல்வார் துல்கர். ஆனால் காதலியோ, இவர் எங்கே இவ்வளவு தூரம் வரப்போகிறார் என்கிற நினைப்பில் வீட்டில் பார்த்த மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட உற்சாகமாக தயாராகி இருப்பார். அதனால் துல்கரை அங்கே எதிர்பார்த்திராத அவர் அப்படியே அதிர்ச்சியாகி விடுவார்.. துல்கரும் 'போங்கடி நீங்களும் உங்க காதலும்' என குட்பை சொல்லிவிட்டு கிளம்பி விடுவார்.
நிற்க.. சில தினங்களுக்கு முன் துல்கர் நடிப்பில் வெளியான சோலோ படத்தின் நான்கு குறும்படங்களில் கடைசியில் இடம்பெற்ற குறும்படத்தின் க்ளைமாக்ஸ் ஏறக்குறைய இதேபோலத்தான்.. துல்கரை உருகி உருகி காதலித்த மிலிட்டரி உயரதிகாரியின் பெண், மேல்படிப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டு வந்தபின் திருமணம் செய்துகொள்வோம் என சொல்லிவிட்டு கிளம்புவார்.. அதன்பின் நான்கு வருடங்கள் அவர் என்ன ஆனார் என்றே துல்கருக்கு தெரியாது..
இந்தநிலையில் தான் காதலியின் திருமண செய்தி தெரியவர, காதலியின் திருமண வீட்டிற்கு செல்வார் துல்கர். கிட்டத்தட்ட முந்தைய படத்தைப்போல காதலி மனப்பூர்வமாக அப்பா பார்த்த மாப்பிள்ளையுடன் திருமணம் செய்யும் சந்தோஷத்தில் இருப்பார். துல்கரை பார்த்ததும் காதலி அதிர்ச்சியாக, முந்தைய படம் போலவே காதலியை நல்லதாக நாலு வார்த்தை கேட்டுவிட்டு 'குட்பை' சொல்லிவிட்டு துல்கர் கிளம்புவதாக காட்சி இடம்பெற்றிருந்தது..
இந்த இரண்டு படங்களிலுமே துல்கரின் காதலிகள் அவரை ஒதுக்கிவிட்டு இன்னொருவரை திருமணம் செய்வதற்கு வெவ்வேறு காரணங்கள் வைத்திருந்தாலும் காட்சியமைப்புகள் ஏறக்குறைய ஒரேபோலத்தான். அதுவும் அடுத்தடுத்த படங்களில் இப்படி இடம்பெறுவதை துல்கராவது கவனித்து மாற்றி இருக்கலாம்.