எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
சிறையிலிருந்த ஜாமீனில் விடுதலையாகி இருக்கும் திலீப்பை பிரபலங்கள் பலரும் அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து வருகின்றனர். மலையாளத்தில் நிவின்பாலி நடித்த '1983' மற்றும் 'ஆக்சன் ஹீரோ பைஜூ' ஆகிய படங்களை இயக்கிய அப்ரிட் ஷைனும், நேற்று திலீப் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்துள்ளார். இதற்கிடையே திலீப்பை பார்க்க அவர் செல்லும்போதும், பார்த்துவிட்டு வெளியே வந்தபோதும் வெளியில் நின்ற புகைப்படக்காரர்கள் மற்றும் வீடியோகிராபர்கள் அவரை தொடர்ந்து படம்பிடிக்கவே அதனால் எரிச்சலானார் அப்ரிட் ஷைன்.
வீட்டிற்கு வெளியே நின்று படம் பிடித்து என்ன செய்யப்போகிறீர்கள் என கோபமாக கேட்டவர் சில கடுமையான வார்த்தைகளையும் பிரயோகித்தாராம். அதற்கு அங்கிருந்த வீடியோகிராபர்கள், உங்களுடைய காரை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நிறுத்தியுள்ளீர்கள்.. அதைத்தான் நாங்கள் படம்பிடித்தோம் என கூறியுள்ளனர்..
இந்தநிலையில் “ஏதோ ஒரு வேகத்தில் நான் அவ்வாறு நடந்துகொண்டேன்.. நான் பேசிய விதம் தவறு தான்” என தனது செயலுக்கு புகைப்பட கலைஞர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் அப்ரிட் ஷைன்.. இதில் என்ன பியூட்டி என்றால், இந்த அப்ரிட் ஷைன் சினிமாவுக்கு வருவதற்கு முன் இதேபோல ஒரு பத்திரிகையில் புகைப்பட கலைஞராக பணியாற்றியவர் என்பது தான். கடந்துவந்த பாதையை மறப்பது என இதைத்தான் சொல்கிறார்களோ..?