மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழில் கம்பீரம், குருதேவா, காற்றுள்ளவரை, வணக்கம் தலைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்த மலையாள நடிகை பிரணதி. மலையாளத்தில் பார் தி பீப்பிள், 4 ஸ்டூடன்ட் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது சினிமா வாய்ப்பு எதுவும் இல்லாத பிரணதி சென்னையில் வசித்து வருகிறார்.
கேரள மாநிலம் தலச்சேரி அவரது சொந்த ஊர். அந்த ஊரில் இருக்கும் பிரணதியின் தாத்தாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை பார்க்க அங்கு சென்றிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பிரணதியின் தாய் மாமன் அரவிந்த் பிரணதியின் வீட்டுக்கு சென்று அவரை துப்பாக்கி முனையில் மிரட்டி விட்டு வந்திருக்கிறார். இதுகுறித்து பிரணதி தலசேரி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் தாய்மாமன் அரவிந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரணநிதிக்கும், அவரது தாய்மாமன் அரவிந்துக்கும் இடையில் தலசேரியில் உள்ள பூர்வீக சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. அதையொட்டியே அரவிந்த் பிரணதியை துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
"கொஞ்ச நாட்களாகவே அரவிந்த் என்னை மிரட்டி வருகிறார். நான் இங்கு வந்ததும் துப்பாக்கி எடுத்துக் கொண்டு வந்து விட்டார். அவர் எனது நெருங்கிய உறவினர்தான் என்றாலும் வேறு வழியில்லாமல்தான் போலீசில் புகார் கூறினேன்" என்கிறார் பிரணதி.