‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கடந்த 2016ஆம் வருடத்திற்கான கேரளா அரசின் திரைப்பட விருதுகள் சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டன. நேற்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மோகன்லால், மம்முட்டி உட்பட இன்றைய இளம் முன்னணி நடிகர்கள் வரை எவரும் கலந்து கொள்ளாதது முதல்வருக்கு வருத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. அது விழாவில் அவர் பேசிய பேச்சிலும் வெளிப்பட்டது..
“இந்த விழாவிற்கு முறைப்படி, சம்பிரதாயப்படி அழைப்பு அனுப்பவில்லை என பலரும் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லையா, அல்லது கலந்து கொள்ள விருப்பம் இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. இது உங்களுக்கான விழா, இதில் நீங்களே கலந்து கொள்ளாமல் புறக்கணித்தால் எப்படி..?” என தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார் முதல்வர் பினராயி விஜயன்.
இந்த விழாவில் கம்மட்டிப்பாடம் படத்தில் நடித்த விநாயகனுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், அனுராக கரிக்கின் வெள்ளம் படத்தில் நடித்த ரெஜிஷா விஜயனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.
விழாவில் ஷோபனா, ரீமா கல்லிங்கல் ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.