மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான 'புக்ரி' படத்தை தொடர்ந்து நடிகர் ஜெயசூர்யா தற்போது 'புண்யாலன் பிரைவேட் லிமிடெட்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். 2013ல் ரஞ்சித் சங்கர் இயக்கத்தில் ஜெயசூர்யா நடித்து ஹிட்டான 'புண்யாலன் அகர்பத்தீஸ்' படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது 'புண்யாலன் பிரைவேட் லிமிடெட்' என்கிற படம் மீண்டும் இதே கூட்டணியில் உருவாகி வருகிறது.
இந்தப்படத்தில் சவுண்ட் எஞ்சினியராக ஜஸ்டின் ஜோஸ் என்பவர் பணியாற்றுகிறார்.. இவர் தான் பிரமாண்ட 'பாகுபலி' படத்திற்கும் சவுண்ட் மிக்ஸிங் பண்ணியவர். அதுமட்டுமல்ல பாஜிராவ் மஸ்தானி' படத்தின் சவுண்ட் மிக்சிங்கிற்காக தேசிய விருதும் பெற்றவர்.. ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்பே இந்தப்படத்தின் முதல் பாகமான 'புண்யாலன் அகர்பத்தீஸ்' படத்திலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.