‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாகுபலி-2 படத்திற்கு அப்பட டைரக்டர் ராஜமவுலி அடுத்து இயக்கும் படம் குறித்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அப்பட நாயகனாக பிரபாஸ், தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் சாஹோ படத்தில் நடிக்கிறார். ஆனால், அந்த படத்தில் வில்லனாக நடித்த ராணா ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.
பாகுபலி-2 படத்திற்கு பிறகு ராணா நடிப்பில் வெளியான படம் நேனே ராஜூ நேனே மந்திரி. இந்த படம் பாகுபலி படங்களுக்குப்பிறகு ராணாவுக்கு ஹிட்டாக அமைந்தது. தெலுங்கில் வெளியாகி விட்ட அப்படம், நான் ஆணையிட்டால் - என்ற பெயரில் தமிழில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், அடுத்தபடியாக ராணா நடிக்கும் ஹாலிவுட் படம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதாவது, 1984ல் குஜராத் மாநிலத்தின் போர்பந்தரில் உள்ள ஆழமான கடல் பகுதியில் மூழ்கிய ஒரு கப்பலை மையப்படுத்தி அந்த படத்தின் கதை உருவாகியுள்ளதாம். அந்த கதைக்கு விஜில் என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ராணாவுடன் நடிக்கும் மற்ற நடிகர் - நடிகையர் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.