‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
லிபர்ட்டி பஷீர்.. ஒருகாலத்தில் மலையாள தயாரிப்பாளர்களை எல்லாம் விதம்விதமாக விதிகள் புகுத்தி கதறடித்தவர் தான் கேரள தியேட்டர்ஸ் எக்சிபிடர்ஸ் சங்க தலைவராக இருந்த லிபர்டி பஷீர். இதனாலேயே அடிக்கடி தியேட்டர்களை போராட்டம் நடத்த வைத்து பலரின் அதிருப்தியை சம்பாதித்தவர்.. இவரை எதிர்த்துதான் நடிகர் திலீப் புதிதாக சங்கம் ஆரம்பித்துடன், லிபர்ட்டி பஷீரையும் சங்கத்தில் இருந்து நீக்கினார்..
தற்போது திலீப் நடிகை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி காவ்யா மாதவனை பற்றி குற்றவாளி பல்சர் சுனில் குறிப்பிட்டுள்ளார் அல்லவா..? இந்த நேரத்தில் உள்ளே நுழைந்த லிபர்ட்டி பஷீர், “காவ்யா மாதவனுக்கும் நடிகை விவகாரத்தில் தொடர்பு உள்ளது நன்றாகவே தெரிகிறது.. இதனால் காவ்யா மாதவனை கைது செய்வதற்கான போதுமான ஆதாரங்கள் இருந்தும் அவர்மீது நடவடிக்கை எடுக்காமல் கரிசனம் காட்டுவது ஏன் என்பதுதான் எனக்கு புரியவில்லை” என கேள்வி எழுப்பியுள்ளார். திலீப்பின் மீதான தனது பகை, கோபத்தின் விளைவாகத்தான் லிபர்ட்டி பஷீர் இப்படி கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.