‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கடந்த மே மாதம் மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலி அழகான பெண் குழந்தைக்கு தந்தையானார். இந்தநிலையில் தனது மகளுக்கு பெயர் சூட்டும் விழாவை மிகச்சிறப்பாக நேற்று கொண்டாடியுள்ளார் நிவின்பாலி. குழந்தைக்கு ரோஸ் தெரசா என பெயரிட்டுள்ளார். அன்னை தெரசாவின் ஞாபகார்த்தமாக இந்த பெயரை அவர் வைத்துள்ளதாக அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்... இந்த பெயர் சூட்டும் விழாவில் நடிகர்கள் குஞ்சாக்கோ போபனும் சுராஜ் வெஞ்சாரமூடுவும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
நிவின்பாலியும் அவரது மனைவி ரீனாவும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். அந்த அன்பின் அடையாளமாக ஏற்கனவே நான்கு வயதில் தாவீத் என்கிற மகன் இருக்கிறான். இப்போது இந்த பெண் குழந்தையின் வரவு நிவின்பாலியின் குடும்பத்தை ரொம்பவே உற்சாகப்படுத்தி இருக்கிறது. தனது குழந்தை பிறந்த சில தினங்களிலேயே இனி அது எங்கு அழைத்துச்செல்லப்பட்டாலும் அதன் வசதிக்காகவே ஒரு மினி கூப்பர் காரையே நிவின்பாலி வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.