‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தற்போது நிவின்பாலி மலையாளத்தில் 'ஹே ஜூட்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முதலாக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் த்ரிஷா. இந்தப்படத்தை ஷ்யாம் பிரசாத் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே, நிவின்பாலி, பிருத்விராஜ் இருவரும் இணைந்து நடித்த 'இவிடே' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மலையாள பத்திரிகை ஒன்றில், சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற தங்களது புகைப்படக்காரருடன் நிவின்பாலி சண்டையிட்டு வாக்குவாதம் செய்ததுடன் திமிராக நடந்து கொண்டார் என செய்தி வெளியாகி இருந்தது. இதுகுறித்து நிவின்பாலி இன்னும் எதுவும் கூறாத நிலையில், படத்தின் இயக்குனர் ஷ்யாம் பிரசாத் தனது சோஷியல் மீடியா பக்கம் மூலமாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்..
“படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும் நிவின்பாலியின் புகைப்படங்களை எடுக்க நான் அனுமதி தந்ததாக சொல்வதில் உண்மையும் இல்லை. அப்படியே நான் அனுமதித்திருந்தாலும், நிவின்பாலியை புகைப்படம் எடுக்க அவரது அனுமதி பெறவேண்டும் அல்லவா..? படத்தின் முக்கியமான காட்சிக்கான உடைகளுடன் இருக்கும் அவரை புகைப்படம் எடுக்க அவர் எப்படி ஒப்புக்கொள்வார்..? இதனால் நிவின்பாலி திமிராக நடந்துகொண்டார் என சம்பந்தப்பட்ட பத்திரிகை வெளியிட்டிருக்கும் செய்தி தவறானது” என விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் ஷ்யாம் பிரசாத்.