‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மலையாள நடிகர் திலீப் கைதானதும் மலையாள திரையுலகம் அதிர்ச்சியில் உறைந்துபோனதென்னவோ உண்மை தான். அதனால் தான் மம்முட்டி, மோகன்லால் உட்பட சீனியர் நடிகர்கள் கூட, நடிகர் சங்க பொதுக்குழு என்கிற பெயரில் கருத்துக்களை தெரிவித்ததோடு மட்டும் நின்றுவிட்டார்கள்.. திலீப்புக்கு ஆதரவாகவோ எதிராகவோ எந்த கருத்தையும் அவர்கள் வெளியிடவில்லை.. ஒருசில சிறிய நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் மட்டுமே தங்களது ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள்.
அந்தவகையில் திலீப் விவகாரம் குறித்து, பிரபல மலையாள நடிகர் சீனிவாசன் தற்போது தனது கருத்துக்களை கூறியுள்ளார். ஒரு நிகழ்ச்சியில் பேசிய சீனிவாசன், “இப்படியெல்லாம் செய்தால் என்னவெல்லாம் எதிர்கொள்ள வேண்டும் என்பது தெரியாத அளவுக்கு திலீப் ஒன்றும் முட்டாள் அல்ல. அவருடன் பழகிய காலத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் அவர் நன்கு ஆலோசித்து முடிவெடுப்பதை நான் கண்கூடாகவே பார்த்திருக்கிறேன்” என கூறியவர், வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இதுகுறித்து அதிகம் பேச மறுத்துவிட்டார்.