மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாள முன்னணி நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் முன்னணி நடிகர் திலீப், கடத்தல் கும்பல் தலைவன் பல்சர் சுனில், நடிகையின் டிரைவர் மார்ட்டின் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக பலரும் போலீஸ் விசாரணை வளைத்திற்குள் வந்துள்ளனர். திலீபின் மனைவியும், முன்னணி நடிகையுமான காவ்யா மாதவனிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் பிரபல மலையாள சினிமா பாடகி ரிமி டோமியிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்திய போலீசார் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ரிமி டோமியிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. நடிகை கடத்தப்பட்ட அன்று ரிமி டோமி, திலீபிடமும், காவ்யா மாதவனிடமும் பலமுறை தொலைபேசியில் பேசியுள்ளார். எனவே கடத்தலில் பாடகிக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
பாடகி ரிமி டோமி திலீப், காவ்யா மாதவன் ஆகியோரின் நெருங்கிய தோழி. இருவருக்கும் இடையே தூதராக இருந்து இருவரின் காதலுக்கும், கல்யாணத்துக்கும் காரணமாக இருந்தவர் ரிமி என்றும். வெளிநாட்டு பணயங்களில் திலீபுக்கும், காவ்யா மாதவனுக்கும் பயண ஏற்பாடுகளை செய்பவராகவும் ரிமி இருந்துள்ளார் என்கிறார்கள்.
இதுகுறித்து ரிமி கூறும்போது "போலீசார் என்னை போனில்தான் விசாரித்தார்கள். நான் அதற்கு சரியான பதில்களை கூறியுள்ளேன். திலீபுக்கும் எனக்கும் எந்தவித வியாபார தொடர்பும் கிடையாது. அவர் கலந்து கொண்ட வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகளில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான். நடிகை கடத்தலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்கிறார் ரிமி.