விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
மலையாள நடிகர் சங்கத்திற்கு (அம்மா) வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக தற்போது இன்னோசெண்ட் உள்ளார். செயலாளராக மம்ட்டியும், துணை செயலாளராக மோகன்லாலும் உள்ளனர். பொருளாராக இருந்த திலீப் சமீபத்தில் நீக்கப்பட்டார்.
மலையாள நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதன் மூலம் 10 கோடி ரூபாய் வருமானம் வந்ததாகவும் ஆனால் வருமானவரித்துறைக்கு 2 கோடி மட்டுமே கணக்கில் காட்டப்பட்டுள்ளதாகவும் வருமாவரித்துறைக்கு புகார் சென்றுள்ளது. இதைத் தொடர்ந்து வருமானவரித்துறையினர் கடந்த 6 ஆண்டுகளில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள், அதன் மூலம் கிடைத்த வருமானம். செலவு செய்யப்பட்ட விபரங்களை தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
"வருமானத்தின் பெரும் பகுதியை நடிகர்களின் நலனுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு முறையான கணக்கு இருக்கிறது. அதிக பணம் புரளும் சங்கங்களுக்கு இதுபோன்ற நோட்டீஸ் வருவது வழக்கமான ஒன்றுதான். இதை பெரிதுப்படுத்த தேவையில்லை. சங்கத்தின் ஆடிட்டரும், வழக்கறிஞரும் அதனை கவனித்துக் கொள்வார்கள்" என்றார் நடிகர் சங்க நிர்வாகி ஒருவர்.