ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
நடிகை சம்பந்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் குறித்து அவ்வப்போது புதிய செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை அளித்தவண்ணம் இருக்கின்றன. கடந்த வருடம் மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணி மரணத்தில் கூட திலீப்பின் பங்கு இருக்கலாம் என்கிற ரீதியில் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் சந்தேகம் தெரிவித்து பரபரப்பை ஏற்ற்படுத்தினார். இதை வலுப்படுத்தும் விதமாக திலீப்பும் கலாபவன் மணியும் கொஞ்ச காலம் ஒன்றாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள் என்கிற விஷயமும் மலையாள திரையுலகம் அறிந்த ஒன்று..
கலாபவன் மணி மறைந்தபின் சில நாட்கள் கழித்து கலாபவன் மணிக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக அவரது சொந்த ஊரான சாலக்குடியில் அவரது பெயரிலேயே மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றை கட்டும் பணிகளில் திலீப் இறங்கியுள்ளார் என தகவல் வெளியானது.. ஏற்கனவே சாலக்குடியில் 'டி சினிமாஸ்' என்கிற பெயரில் ஒரு மல்டிபிளக்ஸ் தியேட்டரை நடத்தி வரும் திலீப், அடுத்ததாக இன்னொரு தியேட்டர் காம்ப்ளக்ஸையும் கட்டுவதற்கு தீர்மானித்திருந்தாராம்.. இந்த புராஜெக்ட்டில் கலாபவன் மணியையும் கூட்டு சேர்ப்பதற்கான முயற்சிகளில் திலீப் இருந்தபோதுதான் கலாபவன் மணியின் எதிரபாராத மரணம் நிகழ்ந்துவிட்டது என்று சொல்லப்பட்டது.
ஆனால் இப்போது லேட்டஸ்ட் தகவலாக திலீப் தனது சினிமா தியேட்டர் தொழில் இருந்து கலாபவன் மணியை வேண்டுமென்றே கழற்றி விட்டார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது. திலீப்புக்கு சொந்தமாக சாலக்குடியில் உள்ள 'டி சினிமாஸ்' தியேட்டருக்கு சாலக்குடியில் இடம் பார்த்து டோக்கன் அட்வான்ஸ் கொடுத்ததெல்லாம் கலாபவன் மணி தானாம். தியேட்டருக்கு கூட 'டி.எம் சினிமாஸ்' என இருவரின் முதல் எழுத்தையும் இணைத்தே பெயர் வைக்க முடிவு செய்திருந்தார்களாம். ஆனால் தியேட்டர் உருவாக ஆரம்பித்த சமயத்தில், அருகில் இருந்த கோவில் புறம்போக்கு நிலத்தை தியேட்டருக்காக அமைச்சர் ஒருவர் ஆக்கிரமித்து கொடுக்கவே, மணியை கழட்டிவிட்டு அமைச்சருடன் பங்குதாரர் ஆகிவிட்டாராம் திலீப்.
அந்த விவகாரம் சிலருக்கு தெரியும் என்பதால் தான், கலாபவன் மணி இறந்த சமயத்தில், அவர் பெயரில் தியேட்டர் கட்டப்போவதாக செய்திகளை கசியவிட்டு, கலாபவன் மணியின் சிறந்த நண்பன் நான் என காட்டிக்கொளும் வேலைகளில் இறங்கினாராம் திலீப்.