‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகை பாவனா விவகாரத்தில் திலீப்புடன் சேர்த்து அவரது மனைவி காவ்யா மாதவனும் வழக்கில் இணைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் காவ்யா மாதவன் நடத்தி வரும் நிறுவனத்தில் கூட போலீஸார் சோதனையெல்லாம் நடத்தினார்கள். இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றும்படி கொடுங்கோலூர் பகவதி கோவிலுக்கு சென்று வழிபாட்டு வந்திருக்கிறார்கள் திலீப்பும், காவ்யா மாதவனும்.
நிலைமை இப்படி இருக்க, கடும் வெயிலில் ஒரு சாரல் மழை என்று சொல்லத்தோன்றும் வகையில் மெல்போர்னில் நடைபெற இருக்கும் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதுக்காக காவ்யா மாதவன் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.
அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், கடந்த வருடம் வெளியாகி பிளாப் ஆன 'பின்னேயும்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காகத்தான் அவர் பெயரை பரிந்துரைத்துள்ளார்கள். அதுமட்டுமல்ல, மற்ற விருதுக்காக நாமினேட் செய்யப்பட்டவர்கள் முழுவதும் பாலிவுட்காரர்களாகவே இருக்க, காவ்யா மாதவன் ஒருவர் மட்டும் தான் தென்னிந்திய சினிமாவில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.