மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தற்போது பிருத்விராஜ் மற்றும் அவரது சகோதரர் இந்திரஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'தியான்'. வரும் வெள்ளியன்று இந்தப்படம் வெளியாக உள்ளது. வழக்கான மலையாள கதைக்களத்தில் இருந்து விலகி வடமாநிலங்களின் பின்புலத்தில் இந்தப்படம் உருவாகியுள்ளது.
வித்தியாசமான கதைகளுக்கு சொந்தக்காரர் என சொல்லப்படும் இந்தப்படத்தின் கதாசிரியரும், நடிகருமான முரளிகோபி இந்தப்படத்தில் வடமாநில மந்திரவாதியாக மொட்டைத்தலை கெட்டப்புடன் ஒரு வித்தியாசமான வேடத்திலும் நடித்துள்ளார். ஆச்சர்யமாக இந்த 'தியான்' படத்திற்கான எந்தவிதமான புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் படக்குழுவினர் ஈடுபடவில்லை.
இதுபற்றி கதாசிரியர் முரளிகோபி கூறும்போது, “விளம்பரங்களும், பப்ளிசிட்டியும் தான் படங்களை ரசிகர்களிடம் எளிதாக கொண்டு போய் சேர்க்கின்றன என்பது மறுக்க முடியாதது தான். அதேசமயம் 'தியான்' போன்ற படங்களைப்பற்றி அதிகம் பப்ளிசிட்டி செய்யாமல் இருப்பதே அந்தப்படத்திற்கு நாம் செய்யும் நன்மையாக இருக்க முடியும். தியேட்டருக்கு படம் பார்க்க வரும் ரசிகர்கள் படம் பற்றிய எந்தவித முன் கற்பனையுமின்றி, அதேசமயம் மிகுந்த எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தால் தான் இந்தப்படத்துடன் ஒன்றமுடியும்.. அதனால் படம் பற்றி நாங்களே பேசுவதை குறைத்துக்கொண்டோம்” என கூறியுள்ளார் முரளிகோபி.