‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகை பாவனா கடத்தல் விவகாரம் சில மாதங்களாக அமுங்கி இருந்த நிலையில் தற்போது மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.. இதற்கு காரணம் பாவனா கடத்தலில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட பல்சர் சுனி(ல்) என்பவன், நடிகர் திலீப்புக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு உள்ளதுபோல எழுதியதாக சொல்லப்பட்ட கடிதம் தான். இதனால் தற்போது திலீப்பை நோக்கி அனைவரின் கவனமும் திரும்பிய நிலையில், இந்த விவகாரத்துக்கும் தனக்கும் எந்த தொடர்புமில்லை என அவர் மறுத்துள்ளார்.. மேலும் உண்மை கண்டறியும் சோதனைக்கு கூட தான் தயார் என கூறியுள்ளார்.
இந்தநிலையில் புலிமுருகன் பட தயாரிப்பாளர் தோமிச்சன் முலக்குப்படம், தற்போது இந்த விவாகரம் இப்போது மீண்டும் திடீரென எழும்பியதற்கு காரணம் இருக்கிறது என கூறியுள்ளார். இதில் குறிவைக்கப்பட்டுள்ளது திலீப் மட்டுமல்ல, தானும் தான் என ஒரு பகீர் தகவலை தெரியப்படுத்தியுள்ளார். காரணம் தற்போது திலீப் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் 'ராம்லீலா' படத்தை தயாரித்துள்ளது இவர் தான்.. 'புலி முருகன்' படம் மூலம் இவர் நல்ல லாபம் சம்பாதித்து இன்டஸ்ட்ரியில் சிலரது கண்களை உறுத்தி வந்ததாகவும், சமயம் பார்த்து பாவனா விவகாரத்தில் மீண்டும் திலீப்பை உள்ளே இழுத்து அவரது இமேஜை குலைப்பதன் மூலம் 'ராம்லீலா' படத்தை ஓடவிடாமல் செய்யும் உள்ளடி வேலைகளும் நடக்கின்றன என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.