தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
சினிமாவில் ஆரம்பத்தில் சின்னச்சின்ன வேடத்தில் நடித்து அப்படியே உள்ளே நுழைந்து பெரியாளாகி விடலாம் என்கிற நினைப்பில் உள்ளே வரும் நடிகர்கள் பலரை கடைசி வரை அவர்களுக்கு ஒரே மாதிரியான கேரக்டர்களிலேயே முத்திரை குத்தப்படும் நிகழ்வுகள் தான் அதிகம்.. போலீஸ்காரர் கேரக்டரில் நடித்தவருக்கு கடைசிவரை அதே கேரக்டர் தான் கிடைக்கும்.. அடியாள் கேரக்டர் என்றால் கடைசிவரை அடியாள் தான்.. மலையாள சினிமாவில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக முக்கியமான வேடங்களில் நடித்து வரும் நடிகர் அஜித் கொல்லம் கூட அப்படி போயிருக்க வேண்டிய ஒருவர் தானாம்..
ஆனால் நடிகர் மம்முட்டியால் தான் அவர் அந்த நிலைக்கு ஆளாவது தடுக்கப்பட்டது.. மம்முட்டி ஹீரோவாக நடித்த ஒரு படத்தில் சில நிமிடங்களே வந்துபோகும் ஒரு கிட்நாப்பர் ரோலில் அஜித் கொல்லத்தை நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் ஷூட்டிங்ஸ்பாட்டுக்கு வந்த அஜித்துக்கு அந்தப்படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டு வேறு ஒரு நடிகர் அதில் நடிக்க இருப்பது தெரியவந்தது.. இதற்கு காரணம் மம்முட்டிதான் என்பது தெரியவர அமைதியாக சென்றுவிட்டாராம். ஆனால் அன்றிரவே அஜித்தின் வீட்டுக்கு சென்ற மம்முட்டி, நீ நன்றாக வளர வேண்டிய நடிகன்.. இந்த மாதிரி ரோலில் நடித்தால் கடைசி வரை அப்படியே இருந்துவிட வேண்டியதுதான்.. அதனால் தான் இந்த கேரக்டரில் நீ நடிக்க வேண்டாம் என்று தடுத்தேன் என கூறினாராம் மம்முட்டி.
அவர் சொன்னது போல அஜித்தும் பொறுமையாக இருக்க அதன்பின் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்கள் தேடிவர ஆரம்பித்ததாம்.. மம்முட்டியும் தனது படங்களில் முக்கியமான கேரக்டர்கள் இருந்தால் அவரை சிபாரிசு செய்வாராம். இந்த 33 வருடங்களில் 500 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட அஜித் கொல்லம். மம்முட்டியுடன் மட்டும் 50 படங்களில் நடித்து விட்டாராம்.