ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
கைதி எண் -150 படத்தில் நடித்த சிரஞ்சீவி, அடுத்து உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் நடிக்கிறார். தெலுங்குப்பட டைரக்டர் சுரேந்திர ரெட்டி இயக்கும் இந்த படம் சுதந்திர போராட்ட வீரரின் கதையில் உருவாகிறது. இந்த படத்திற்காக பராச்சூரி சகோதரர்கள் மற்றும் சில எழுத்தாளர்களும் இணைந்து கதையை ரெடி பண்ணியிருக்கிறார்களாம்.
அதோடு, ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், கலை இயக்குனர் ராஜீவன் ஆகியோர் இணைந்துள்ள இந்த படத்தில் சிரஞ்சீவியின் தோற்றங்களை பல்வேறு கோணங்களில் சித்தரிக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அதற்காக சில ஓவியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள், கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் ஏற்ப சிரஞ்சீவியை எந்தமாதிரியான கோணங்களில் வெளிப்படுத்தலாம் என்று ஓவியங்களை வரைந்து கொண்டிருக்கிறார்களாம். அதில் சிறந்த ஓவியங்களை தேர்வு செய்து அந்த கெட்டப்பில் சிரஞ்சீவியை இந்த படத்தில் நடிக்க வைக்கிறாராம் சுரேந்தர் ரெட்டி.