‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மலையாளத்தில் மீண்டும் ஒரு பிரமாண்டமான படமாக உருவாகி இருக்கிறது 'தியான்' என்கிற படம். பிருத்விராஜ், இந்திரஜித் சகோதரர்கள் இருவரும் 12வது முறையாக மீண்டும் இணைந்து நடித்துள்ளார்கள். நடிகரும், கதாசிரியருமான முரளி கோபி இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இந்தப்படத்தை ஜியென் கிருஷ்ணகுமார் என்பவர் இயக்குகிறார். வரலாற்று பின்னணியில் வட இந்தியாவை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் பிருத்விராஜ், அஸ்லான் முகமது என்கிற கேரக்டரிலும் இந்திரஜித், பட்டாபிராமன் என்கிற கேரக்டரிலும் நடித்துள்ளார்கள்.
“ஒரு மனிதனை நம்பமுடியாத அதிசயம் ஒன்று சந்திக்கும்போது அங்கே வரலாற்றுக்காவியம் பிறக்கிறது” என்கிற டேக்லைனுடன் இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வட மாநிலங்களிலும் மற்றவை ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மிகப்பெரிய செட்டுகள் அமைக்கப்படும் படமாக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால் மோகன்லாலின் 'புலி முருகன்' படத்திற்கு செலவான 25 கோடி ரூபாய் தான் இந்தப்படத்திற்கும் செலவாகி இருக்கிறது என சொல்லப்படுகிறது. மலையாள சினிமாவின் வியாபார எல்லை விரிவடைந்து வரும் தைரியத்தில் தான் இந்தப்படத்திற்கு இவ்வளவு பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது... அனேகமாக ஈத் பண்டிகை கொண்டாட்டமாக இந்தப்படம் ரிலீசாகும் என தெரிகிறது.