'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
தமிழ்சினிமாவிற்கு மட்டுமல்ல, மலையாள சினிமாவும் கலாச்சார காவலர்கள் என சொல்லிக்கொள்ளும் சிலரால் அவ்வப்போது எதிர்ப்பையும் பட ரிலீசில் சிக்கல்களையும் சந்தித்துத்தான் வருகின்றது. அதில் லேட்டஸ்ட்டாக எதிர்ப்புக்கு ஆளாகி இருபது, இன்னும் ஆரம்பிக்கவே படாத, தற்போது 'மகாபாரதம்' என டைட்டில் அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ள மோகன்லாலின் ஆயிரம் கோடி பட்ஜெட்தான 'மகாபாரதம்' படம் தான். 'கேரள ஹிந்து ஐக்கிய வேதி' என்கிற அமைப்பின் தலைவரான கே.பி.சசிகலா என்பவர் தான் இதை எதிர்த்து குரல் கொடுத்திருப்பவர்.
எதற்காக மோகன்லால் படத்தை எதிர்க்கிறார் என்றால்,, மகாபாரதம் என்கிற டைட்டிலை இந்தப்படத்துக்கு வைக்க கூடாதாம்.. காரணம் இந்தப்படத்திற்கான கதையாக எழுதப்பட்ட 'ரண்டமூழம்' நாவலே, மகாபாரதத்தில் இல்லாத சில நிகழ்வுகளை இட்டுக்கட்டி, பீமனின் கேரக்டரை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கிறது.. அப்புறம் எப்படி இதற்கு மகாபாரதம் என டைட்டில் வைத்தார்கள்.. அதை உடனே மாற்றவேண்டும்.. அப்படி இந்தப்படம் தயாராகி, 'மகாபாரதம்' டைட்டிலுடன் வெளியானால் அந்தப்படத்தை தியேட்டர்களில் திரையிட விடமாட்டோம் என எதிர்ப்புக்குரல் எழுப்பியுள்ளார் இந்த சசிகலா.