‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அரசியல் பிரவேசத்திற்கு பிறகு கைதி நம்பர் 150 படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார் சிரஞ்சீவி. அதையடுத்து பல கதைகளை கேட்டு வந்த அவர், தற்போது ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய சுதந்திர போராட்ட வீரர் உயாலவாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கை வரலாறு கதையை ஓகே செய்தார். நடிகர் ராம் சரண் தயாரிக்கும் இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். செட் வேலைகளை ராஜீவன் தொடங்கி விட்டார்.
இந்த படம் குறித்து சிரஞ்சீவி அளித்துள்ள பேட்டியில், சுதந்திர போராட்ட வீரரின் கதையில் நடிப்பது பெருமையாக உள்ளது. அதோடு இந்த படத்தை முதலில் தமிழ், தெலுங்கில் தான் தயாரிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சுதந்திரப்போராட்ட வீரர் உயாலவாடா நரசிம்ம ரெட்டியைப் பற்றி இந்தியா முழுக்க உள்ளவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் மெகா பட்ஜெட்டில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பை தொடங்கி 2018-ம் ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.