‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாகுபலி-2 வுக்குப் பிறகு ஸ்பைடர், சாஹோ என சில படங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி மற்றும் நான்கு மொழிகளில் தயாராகி வருகின்றன. இந்நிலையில், சிரஞ்சீவி நடிக்கும் 151வது படமான உயாலவாடா நரசிம்ம ரெட்டி என்ற படமும் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. சிரஞ்சீவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 22-ந்தேதி தொடங்கயிருக்கும் இந்த படத்தை சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம்சரண் தேஜா ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். சிவலிங்கா படத்திற்கு பிறகு தமிழில் ஸ்கெட்ச், யார் இவன், வா போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார் எஸ்.எஸ்.தமன். தமிழை விட தெலுங்கில் அதிகப்படியான படங்களுக்கு இசையமைத்து வருகிறார். முக்கியமாக அங்கு முன்னணியில் இருந்து வரும் தேவிஸ்ரீ பிரசாத்துக்கும், தமனுக்குமிடையே மிகப்பெரிய போட்டியே நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சிரஞ்சீவியின் 150 படமான கைதி எண் 150 படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்த நிலையில், தற்போது சிரஞ்சீவியின் 151வது படமான உயாலவாடா நரசிம்ம ரெட்டி படத்தை கைப்பற்றியிருக்கிறார் தமன்.