ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
மிகப்பெரிய வரலாற்று காவியமாக 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் மகாபாரதா படத்தில் மோகன்லால் பீமன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்தநிலையில் கமால் ரஷீத் கான் என்கிற பாலிவுட் நடிகர் தேவையில்லாமல் மோகன்லால் மீது சேற்றை வாரி இறைக்கும் விதமான மோசமான கமெண்ட்டுகளை தனது டுவிட்டரில் பதிந்துள்ளார். அதாவது “நீங்கள் சோட்டா பீம் மாதிரித்தான் இருக்கிறீர்கள். பின் எதற்கு பீமன் ரோலில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்..? ஏன் பி.ஆர்.ஷெட்டியின் கோடிக்கணக்கான பணத்தை விரயம் பண்ண நினைக்கிறீர்கள்” என கிண்டலடித்துள்ளார்..
இதற்கு நாடெங்கிலும் உள்ள மோகன்லால் ரசிகர்கள் மற்றும் பொதுவான ரசிகர்களிடம் இருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.. குறிப்பாக மோகன்லால் ரசிகர்களுடன் எப்போதும் மோதிக்கொண்டு இருக்கும் மம்முட்டி ரசிகர்கள், இந்த விஷயத்தில் மோகன்லாலுக்கு ஆதரவாக, கமால் ரஷீத் கானை அவரது டுவிட்டர் தளத்தில் வறுத்து எடுத்து வருகின்றனர். “வெறும் 3 படங்களில் மட்டும் தான் நீ நடித்திருக்கிறாய்.. மோகன்லால் 3 தேசிய விருதுகளையே வாங்கியிருக்கிறார்.. அவர் நடித்த ஒரு படத்தையாவது உருப்படியாக பார்.. அப்புறம் பேசு” என கண்டனங்களை அள்ளி இறைத்து வருகிறார்கள்.
ராம்கோபால் வர்மா படத்தில் மோகன்லால் நடித்ததை கமால் ரஷீத் கான் பார்த்துள்ளதாகவும் அதில் மோகன்லாலை பார்க்கும்போது ஜோக்கர் மாதிரி இருப்பதாகவும் மேலும் சில கமெண்ட்டுகளை பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பரபரப்பான கமெண்ட்டுகளை தொடர்ந்து அவரது பேட்டிக்காக மீடியாக்கள் அவரை வலைபோட்டு தேட, அவரோ, “நண்பர்களே.. பேட்டி எடுப்பதற்காக என்னை தேட வேண்டாம். நான் மும்பையில் இல்லை துபாயில் இருக்கிறேன்” என டுவீட் தட்டியிருக்கிறார். சீப் பப்ளிசிட்டிக்காகவே கமால் ரஷீத் கான் இப்படி செய்வதாக பலரும் தங்ளது கண்டனங்களை தெரிவித்தவாறு உள்ளனர்.