மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பஞ்சாபி பெண்ணான வாமிகா இந்தி படங்களில் அறிமுகமாகி அதன்பிறகு சொந்த மொழியான பஞ்சாபி படங்களில் நடித்து வந்தார். பாலே மன்ஞ்சி ரோஜு என்ற தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவரை கவனித்த இயக்குனர் செல்வராகவன், தன் மனைவி கீதாஞ்சலி இயக்கிய மாலை நேரத்து மயக்கம் படத்தில் நடிக்க வைத்தார்.
அந்தப் படத்தில் வாமிகாவின் நடிப்பு பேசப்பட்டது. ஆனால் படத்தின் கதையில் டபுள் ஏ இருந்ததால் படம் ஓடவில்லை. இதனால் நிறைய கனவுகளோடு தமிழ் சினிமாவுக்கு வந்த வாமிகாவுக்கு ஏற்பட்டது ஏமாற்றமே. ஒரு வருடம் கையில் படம் இல்லாமல் இருந்த வாமிகாவுக்கு மலையாள திரையுலகம் கைகொடுத்துள்ளது.
இந்தியில் சல்மான்கான் நடித்த சுல்தான் படம் மாதிரியான ஒரு மல்யுத்த படம் மலையாளத்தில் தயாராகிறது. படத்தின் பெயர் கோதா. இந்தப் படத்தில் வாமிகா மல்யுத்த வீராங்கணையாக நடிக்கிறார். இதற்காக அவர் முறையாக மல்யுத்தம் கற்று இந்தப் படத்தில் நடித்து வருகிறார். பசில் ஜோசப் இயக்கும் இந்தப் படத்தில் டொவினோ தாமஸ் சிக்ஸ்பேக் வைத்து மல்யுத்த வீரராக நடிக்கிறார். அஜூ வர்கீஸ், ரெஞ்சி பணிக்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்கிறர், ஷான் ரஹ்மான் இசை அமைக்கிறார். பஞ்சாபி பெண்ணான வாமிகா இந்தப் படத்தில் அதிதி சிங் என்ற பஞ்சாபி பெண்ணாகவே நடிப்பது குறிப்பிடத்தக்கது.