மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மலையாள திரையுலகை பொறுத்தவரை, நடிகர்கள் மட்டுமல்ல, மஞ்சு வாரியர் போன்ற ஒருசில நடிகைகளும் அவ்வப்போது சமூகத்துக்கு தங்களால் பயனுள்ள விஷயங்களை செய்ய தயங்குவதில்லை என்பதை சமீபத்திய நிகழ்வு ஒன்று வெளிக்காட்டியுள்ளது. கேரளாவில் ஆழப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிபேடு என்கிற பகுதியில் உள்ள அர்ச்சா மற்றும் ஆதிரா என பள்ளிக்கூடம் செல்லும் இரு சிறுமிகள் பள்ளி முடித்து வந்ததும் தங்குவது ஸ்டேஷன் அருகில் உள்ள ஒன்றுக்கும் உதவாமல் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கும் ரயில் பெட்டிகளில் தான் என்பது மஞ்சு வாரியருக்கு தெரியவந்தது.
அந்த சிறுமிகளும் அவரது பெற்றோரும் வறுமை காரணமாக குடியிருக்க சொந்த வீடு இல்லாமல் அந்த பெட்டிகளில் உள்ள குறைந்த வசதிகளை வைத்து அதையே வீடாக பயன்படுத்தி வந்துள்ளனர்.. இந்த விபரம் மஞ்சு வாரியருக்கு தெரியவந்ததும், தனது சொந்த செலவில் அவர்களுக்கு 5 சென்ட் நிலத்தில் கட்டப்பட்ட அழகான வீடு ஒன்றை வழங்கியுள்ளார். மேலும் தனக்கிருந்த நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துவிட்டு, இந்த இந்து புதுமனை புகும் விழா நிகழ்வில் கலந்துகொண்டு அந்த எளிய குடும்பத்தினரின் முகத்தில் மகிழ்ச்சி பூக்க செய்துள்ளார் மஞ்சு வாரியர்.