மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
காதலுக்கு கோட்டை கட்டி கவனம் ஈர்த்த தேவயானிக்கு இப்போது தமிழில் பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. அம்மா, அண்ணி கேரக்டரில் தான் நடிக்க அழைக்கிறார்கள். இதனால் சினிமாவை விட்டு சற்று விலகி இருந்த தேவயானி இப்போது மை ஸ்கூல் என்ற மலையாளப் படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் கேரளாவில் ஒரு குழந்தை வெறிநாய் கடிக்கு உள்ளாகி மீண்ட கதையைத்தான் மை ஸ்கூல் படமாக உருவாக்குகிறார்கள். இதனை பப்பன் பயட்டுவில்லா இயக்குகிறார். தேவயானி மகாலட்சுமி என்ற பள்ளி ஆசிரியையாக நடிக்கிறார். அவரது தந்தையாக மது நடிக்கிறார். கலாபவன் மணி நடித்துள்ள கடைசி மலையாளப் படம் இது. சமுத்திரகனி, கொச்சு பரம்மன், சரண்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். தமிழ் நாட்டு ஆசிரியராக சமுத்திரகனி நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் 5 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானி ரீ-என்ட்ரி ஆகிறார்.
மலையாள சினிமா தேவயானிக்கு புதிதில்லை. 15 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கடைசியாக சர்கார் காலனி படத்தில் நடித்திருந்தார். மை ஸ்கூல் தேவயானிக்கு மலையாள சினிமா கதவை மீண்டும் திறக்குமா என்று படம் வெளிவந்த பிறகு தெரிய வரும்.