‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இதுநாள் வரை மும்பை ஏரியாவை விட்டு வைத்திருந்த அல்லது கண்டுகொள்ளாமல் விட்டிருந்த மோகன்லால் கடந்த ஆறு மாத அளவில் மும்பை தியேட்டர்களையும் மும்பை விநியோகஸ்தர்களையும் அவ்வளவு ஏன் பாலிவுட் சூப்பர் நடிகர்களையுமே அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் நிலைகுலைய வைத்திருக்கிறார்... ஆம். கடந்த செப்டம்பர் முதல் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான மூன்று படங்களும் மும்பையில் அதே தேதிகளில் வெளியாகி 50 நாட்களை கடந்து ஒடி ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கின்றன.
'ஒப்பம்', 'புலி முருகன்' மற்றும் முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல் என மோகன்லாலின் மூன்று படங்களும் மூன்றுவிதமான தளத்தில் எடுக்கப்பட்ட படங்கள் என்றாலும் மூன்றுக்குமே மும்பை மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதுதான் ஆச்சர்யம்.. சமீபத்தில் வெளியான ஷாருக்கானின் ராயீஸ், ஹ்ரித்திக் ரோஷனின் 'காபில்' மற்றும் அக்சய்குமாரின் 'ஜாலி எல்எல்பி-2' ஆகியவை நாற்பது நாட்களை தாண்டுவதற்கே தலையால் தண்ணி குடிக்க வேண்டியிருக்கும் சூழலில் மோகன்லாலின் இந்த ஹாட்ரிக் சாதனை அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.