மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலியை பொறுத்தவரை படங்களை பார்த்து பார்த்து தான் தேர்வு செய்கிறார்.. ஒவ்வொரு படத்துக்கும் சீரான இடைவெளியில் தான் கால்ஷீட்டும் கொடுத்து வருகிறார். ஆனாலும் கடந்த மே மாதம் அவர் நடித்த 'ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்' படம் வெளியாகி சுமார் பத்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இன்னும் தனது அடுத்த படத்தை ரிலீஸ் பண்ணாமல் இருக்கிறார் என்றால் நிச்சயம் காரணம் இருக்கத்தான் செய்யும்.. ஆனால் அலசி ஆராய்ந்ததில் நடிகர் லாரன்ஸை போல ஒன்றுக்கு இரண்டாக படங்களை முடித்துவிட்டு எந்தப்படத்தை முதலில் வெளியிடுவது என்கிற குழப்பத்தில் தான் இருந்துவந்தாராம் நிவின்பாலி.
தற்போது இவர் நடித்துள்ள 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' என்கிற படமும் 'சகாவு' என்கிற படமும் ரிலீஸ்க்கு தயாராக இருக்கின்றன. இரண்டு பட தயாரிப்பளர்களும் தங்களது படத்தைத்தான் முதலில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்களாம். ஒருவழியாக முதலில் 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' படத்தை வரும் ஏப்ரல்-14ல் சித்திரை விஷு கொண்டாட்டமாக ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருந்தாராம்.
ஆனால் தற்போது அந்த எண்ணத்தை மாற்றி, 'சகாவு' படத்தை ஏப்ரல்-14ல் ரிலீஸ் செய்கிறாராம்.. நிவின்பாலி மலையாளத்தில் மட்டும் நடித்து வந்த வரையில் அவரது படங்களின் ரிலீஸ் சீராக இருந்துவந்தது. இப்போது தமிழில் நடித்துள்ள 'ரிச்சி' படத்தின் கால்ஷீட் குழப்படிகளும் அதனால் நிவின்பாலியின் மலையாள படங்களில் ஏற்பட்ட தேதிகளின் பாதிப்புகளும் தான் இத்தனை குழப்பத்துக்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது.