‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இன்றைய தலைமுறை ரசிகர்களை பொறுத்தவரை நடிகை சாரதா என்பவரை ஒரு குணச்சித்திர நடிகையாக மட்டும் தான் தெரிந்திருக்கும். ஆனால் அறுபது எழுபதுகளில் கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர் தான் சாரதா. ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முறை ஊர்வசி விருது வாங்கிய ஒரே நடிகை சாரதா. அந்த ஊர்வசி விருது இப்பொழுது சிறந்த நடிகைக்கான தேசிய விருது என்றழைக்கப்படுகிறது. அதனாலேயே இவரை 'ஊர்வசி' சாரதா என்றே அனைவரும் அழைப்பது வழக்கம். சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவரது பூர்விகம் தெலுங்கு என்றாலும் மலையாளத்தில் இவர் கதாநாயகியாக நடித்த படங்கள் இவரை புகழ் வெளிச்சத்தில் உயர்த்தி பிடித்தன.
நாளடைவில் குணச்சித்திர நடிகையாக மாறிய சாரதா தமிழ், தெலுங்கு என தனது வட்டத்தை சுருக்கிக்கொண்டார். மலையாள சினிமாவை பொறுத்தவரை சீனியர்களான பிரேம் நசீர், மது, சத்யன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ள சாரதாவிற்கு இன்னும் மோகன்லாலுடன் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்காதது ஒரு மனக்குறையாகவே இருந்து வருகிறதாம். சமீபத்தில் மோகன்லாலுடன் நடிக்கும் ஆசையை தனது பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார் சாரதா.. இதற்கு முன் 2015ல் 'அம்மக்கொரு தாராட்டு' என்கிற மலையாள படத்தில் சராதா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.